திண்டுக்கல், செப். 15: சென்னை பள்ளி கரணை சாலையில் அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சரிந்ததில், டூவீலரில் சென்ற ஐடி ஊழியர் சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்து லாரி மோதி பலியானார். இதன் எதிரொலியாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என தொண்டவர்களுக்கு அறிவுறுத்தினர். திண்டுக்கல்லில் நேற்று மாநகராட்சி நிர்வாகம், போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து கட்சியினர், வணிக நிறுவனங்கள் வைத்திருந்த பேனர்களை தாங்களாகவே முன்வந்து அகற்றினர்.