×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கொடைக்கானல், செப். 15:  கொடைக்கானல் மேல்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூம்பாறை பிரிவு அருகே குண்டுபட்டி காந்திநகரை சேர்ந்த கணேசன் (57), பழம்புத்தூரை சேர்ந்த முத்துக்குமரன் (39) ஆகியோர் கஞ்சா விற்று வந்தது தெரிந்தது. போலீசாரை கண்டதும்  தப்பியோட முயன்ற 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...