பொள்ளாச்சி, செப். 15: கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள குடியிருப்பில் வசிப்பவர் சண்முகநாதன் மனைவி பிச்சம்மாள்(41). இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, உடுமலையில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கோவைக்கு செல்ல பஸ்சில் புறப்பட்டார். பொள்ளாச்சிக்கு அந்த பஸ் வந்தபோது, கீழே இறங்கி ஒரு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின் மீண்டும் பஸ்சில் ஏறியபோது, தனது கையில் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.