சோமனூர், செப். 15: சோமனூர் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(42) விசைத்தறி தொழிலாளி, இவர் பள்ளபாளையம் பகுதியில் கூடுதல் விலைக்கு அரசு மதுவை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மங்கலம் காவல்துறை ஆய்வாளர் நிர்மலா முருகேசனை கைது செய்து அவரிடமிருந்து ஏழு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.