அண்ணா பிறந்த நாளில் கோவை காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு முதல்வர் விருது

கோவை, செப்.15:தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவையை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு முதல்வர் விருது வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பணியில் சிறப்பாக பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அண்ணா பிறந்தநாளில் முதல்வர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல்வர் விருதுக்கு தமிழகம் முழுவதும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவையில் தலைமையக துணை ஆணையர் செல்வகுமார், குற்றப்பிரிவு சிஐடி டிஎஸ்பி முத்துசாமி, சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் குமார், குற்றப்பிரிவு சிஐடி ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபல்லா, குற்ற புலனாய்வு சிஐடி சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகிய 5 பேர் முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்குகிறார்.

Related Stories: