கோவை, செப்.15:கோவையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் (சட்டம்,ஒழுங்கு) பாலஜி சரவணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக கோவை மாநகரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைதுணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.