ஈரோடு, செப். 15: பெருந்துறை தாலுகா வேப்பம்பாளையம் தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ வித்யா கணபதி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நாளை (16ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி இன்று (15ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி வழிபாடும், காலை 8 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை 4.15 மணிக்கு முதற்கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு வழிபாடு, நடக்கிறது.