×

ஈரோடு வித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

ஈரோடு, செப். 15:  பெருந்துறை தாலுகா வேப்பம்பாளையம் தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ வித்யா கணபதி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம்  நாளை (16ம் தேதி) நடக்கிறது.  விழாவையொட்டி இன்று (15ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி வழிபாடும், காலை 8 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை 4.15 மணிக்கு முதற்கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு வழிபாடு,  நடக்கிறது.

 இதை தொடர்ந்து நாளை (16ம் தேதி) காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வாக காலை 9 மணிக்கு மேல் வித்யா கணபதி கோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளை தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியின் தலைவர், செயலாளர், பொருளாளர், முதல்வர் ஆகியோர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகம் சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார் தலைமையில் நடக்க உள்ளது.

Tags : Erode Vidya Ganapathi Temple ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு