கல்லூரி பஸ்சை வழிமறித்து குடிபோதையில் தகராறு செய்த ஊர்க்காவல்படை வீரர் மீது புகார்

பவானி, செப். 15:  பவானி அருகே உள்ள மயிலம்பாடி டாஸ்மாக் கடையில் மது அருந்திய ஒரு வாலிபர் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் கல்லூரி பஸ்சை வழிமறித்து அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதை பார்த்த பூனாச்சி, முகாசிபுதூர் தோப்புக்காட்டூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோகுலகிருஷ்ணன் (22) தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கோகுலகிருஷ்ணனை அவதூறான வார்த்தைகளால் பேசியதோடு, தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுலகிருஷ்ணன் பவானி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் தகராறு செய்த நபர் அந்தியூர் அடுத்த அந்தியூர் காலனியை சேர்ந்த நடராஜ் மகன் தமிழரசன் (27) என்பதும், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

Related Stories: