ஈரோடு, செப். 15: ஈரோடு மாவட்டத்தில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடப்பு ஆண்டில் நடக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பில் தேசிய வருமானத்தில் விவசாயம் அல்லாத அமைப்பு சாரா தொழில் துறையின் பங்களிப்பு மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த திட்டமிடுதலுக்காகவும், தொழில் துறை சார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கவும் மேற்கொள்ளப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி மாவட்ட புள்ளியியல் துறை சார்பில் துவங்கப்பட்டுள்ளது.