ேசலம், செப்.11: சேலம் மாசிநாயக்கன்பட்டி அப்பு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா(65). இவர் நேற்று முன்தினம், தனது வீட்டு வாசல் முன்பு பூப்பறித்து கொண்டிருந்தார். அப்போது இந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவரும், துணியால் முகத்தை மறைத்து கட்டிக் கொண்டு ஒருவரும் வந்தனர். அப்போது, அவர்கள் பூப்பறித்துக் கொண்டிருந்த வித்யா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அவர் நகையை தனது கைகளால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து வித்யா அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.