×

கேரம் போட்டியில் சேம்பார் பள்ளி சாதனை

காளையார்கோவில், செப். 11: மண்டல அளவிலான கேரம் போட்டிகள் சாக்கூர் உலக மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவிகளுக்கான கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேம்பார் மாணவிகள் செல்சியா மற்றும் திலகவதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஒற்றையர் பிரிவில் செல்சியா இரண்டாமிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமலராஜ் மற்றும் ஆசிரியர்கள் சுரேஷ், குருசித்ரா, முத்துக்குமார், ரெக்ஸ், சீனிவாசன், அன்னலெட்சுமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.




Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்