மேலூரில் செப்.13ல் மின்குறை தீர்கூட்டம்

மதுரை, செப். 11: மதுரை கிழக்கு கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான மின்குறைதீர் கூட்டம் வரும் 13ம் தேதி மேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி கலந்துகொண்டு குறைகளை கேட்கிறார்.இக்கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது மின் நுகர்வு தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி ெசய்து கொள்ளலாம்.

Related Stories: