×

கள்ளிச்சால் பகுதியில் குடியிருப்பு வழங்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை

பந்தலூர், செப்.11:  பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கள்ளிச்சால் ஆதிவாசி காலனியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கூரை வீடுகளுக்கு பிளாஸ்டிக் தார்பை போர்த்தி பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கின்றனர். மழைகாலங்களில் கூரைகளிலிருந்து மழைநீர் கசிவதால் மக்கள் குடியிருக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தங்களுக்கு குடியிருப்புகள் கட்டி தர வேண்டுமென அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதிவாசி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்தவித  நடவடிக்கையும் இல்லை.

ஆதிவாசி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்தி செயல்படுத்தினாலும் இதுவரை எந்தவித  திட்டங்களும் முழுமையக சென்றடையவில்லை. அடிப்டை வசதிகளான தெருவிளக்கு நடைபாதை, மின்சாரம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் சிரம்பப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து ஆதிவாசி மக்களுக்கு முறையான குடியிருப்பு கட்டிதர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Adivasi ,area ,Kallichal ,
× RELATED அடிப்படை வசதிகள் இல்லை நாடாளுமன்ற...