ஈரோடு, செப்.11: அல்-அமீன் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அப்ரண்டிஸ் பயிற்சி உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு, ‘மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பித்தவுடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்தும், மேலும் துறைவாரியாக பயிற்சியின் போது வழங்கப்படும் ஊதியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.