ஈரோடு, செப். 11: ஈரோடு கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர் குழாய்கள் இணைப்பு பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 9 ஆயிரத்து 500 குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் குழாய்கள் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாயில் வரும் கழிவுநீர் அனைத்தும் ஈரோடு அருகே வெண்டிபாளையம் பீளமேடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் உப்புத்தன்மை ஆய்வு செய்யப்பட்டு காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.