மது விற்ற 2 பேர் கைது

ஈரோடு, செப். 11: ஈரோடு அருகே மது விற்பனை செய்த 2பேரை போலீசார் கைத செய்தனர். ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரப்பாடி குட்டை பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் குருமந்தூர் ஆயிபாளையம் காலனியை சேர்ந்த ராமச்சந்திரன் (41) என தெரிய வந்தது. அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல காசியூர் தண்ணீர் டேங்க் அருகே சட்ட விரோதமாக மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (எ) செம்பான்டன் (68) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: