நெல்லை, செப். 11: தலைவன்கோட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி திருநீலபாண்டியனை இழந்துவாடும் குடும்பத்தினரை அமைச்சர் ராஜலட்சுமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தலைவன்கோட்டையில் செயல்படும் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தலைவரான விஜயபாண்டியனுக்கும், துணைத்தலைவரான அதிமுக பிரமுகர் திருநீலபாண்டியனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 31ம்தேதி தலைவன்கோட்டையில் திருநீல பாண்டியனை விஜயபாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் நீதிமன்றத்தில் விஜயபாண்டியன் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.