செங்கோட்டை, செப். 11: இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் பனைமர விதைகள் நடும்பணி துவங்கியது. நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் அறிவுரையின்பேரில் இலஞ்சி பேரூராட்சியில் நீர்மேலாண்மை இயக்கத்தின் முக்கிய கூறான தீவிர காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இலஞ்சிப் பகுதிகளில் பனைமர விதைகள் நடும்பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக இலஞ்சி பெரியகுளத்தின் கரையில் 3 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட்டன.