சென்னை: ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கோ.கணேசனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்ட மாநகர பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நங்கநல்லூரில் இருந்து தாம்பரம், வண்டலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், நங்கநல்லூரில் இருந்து உயர்நீதிமன்றம், நங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு, கீழ்கட்டளையில் இருந்து பெரம்பூர், கிண்டியில் இருந்து சோழிங்கநல்லூர், நங்கநல்லூரில் இருந்து சைதாப்பேட்டை, கவுல்பஜாரில் இருந்து கோயம்பேடு வரை கிண்டி வழியாக இயக்கப்பட்ட பஸ்கள் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.