ஆறுமுகநேரி, செப்.11: சாகுபுரம் கமலாவதி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவிற்கு பள்ளி முதல்வர் சண்முகானந்தன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஸ்டீபன் பாலாசீர், துணை முதல்வர் வனிதா வி ராயன், தலைமையாசிரியர்(பொ) சுப்புரத்தினா, மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.