நாசரேத், செப்.11: இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 13ம்தேதி தொடங்குகிறது.
நாசரேத் அருகே உள்ள இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா வருகிற 13ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவை முன்னிட்டு தினமும் மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அன்னதர்மமும் நடக்கிறது. சாமித்தோப்பு முத்துநாயகம் குழுவினர் திருஏடு வாசிக்கிறார்கள்.