சாத்தான்குளம், செப்.11: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் காலனியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி தேவகனி. இவர்களுக்கு கிறிஸ்டோபர்(30) உள்பட 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில் 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் கிறிஸ்டோபர், டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார். தூத்துக்குடி தெர்மல்நகர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தகாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேசி இன்று (11ம்தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண வேலைகளில் இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.