×

எலி பேஸ்ட் தின்று மாணவி சாவு

விருத்தாசலம், செப். 11: விருத்தாசலம் ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லையை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ஆர்த்தி(14). இவர் மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவரது தந்தை வெங்கடேசனுக்கும், தாய் அழகேஸ்வரிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக விஜயமாநகரத்தில் உள்ள  தனது உறவினரான ரெங்கநாயகி என்பவர் வீட்டில் ஆர்த்தி, தாய் அழகேஸ்வரி, அண்ணன் மனோ  ஆகிய மூவரும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் வசித்து வந்துள்ளனர். தனது பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் சூழ்நிலையை அறிந்த ஆர்த்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு கடந்த 2ஆம் தேதி வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்த்தியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆர்த்தி  இறந்தார். இதுகுறித்து ஆர்த்தியின் பெரியதந்தை சங்கர் கொடுத்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...