×

பைக் விபத்தில் வாலிபர் பலி

திருக்கோவிலூர்,  செப். 11: திருக்கோவிலூர் அடுத்த அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர்  ஏழுமலை மகன் தினேஷ் (20). பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள ஜ.அரியூருக்கு பைக்கில் சென்றார். அங்கு தனது அக்காள் திருமணத்திற்காக அலங்கார பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும்  வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். காடியார் பிரிவு சாலையில் உள்ள அய்யனார் கோயில்  அருகே வந்தபோது தினஷே் பைக் மீது எதிரே வந்த பைக் மோதியது. இதில் தினேஷ் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள்  அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்  நிலையத்தில் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி