தூக்கு போட்டு மாணவன் தற்கொலை

சின்னசேலம், செப். 11: சின்னசேலம்  அருகே வெட்டிபெருமாளகரம் மணியக்கார தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(36).  இவரது மகன் சுரேந்திரன்(14). இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள பள்ளியில்  எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  சுரேந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிகிறது. இதனால் அவருடைய  பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும்  உடல்நிலை சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் மன விரக்தியடைந்த  சுரேந்திரன் நேற்று காலை வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டார்.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் இறந்து விட்டார். இதுகுறித்து  சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: