×

முன்விரோத தகராறில் வாலிபருக்கு பாட்டில் குத்து

விருத்தாசலம், செப். 11: கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கணபதிகுறிச்சி கிராமத்தை   சேர்ந்தவர் தெய்வேந்திரன் மகன் விஜய்(24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த  சுப்பிரமணியன் மகன் செல்வமணி(26) என்பவருக்கும் கடந்த விநாயகர்  சதுர்த்தியன்று கிராமத்தில் விநாயகர் சிலைகள் வைக்கும்போது ஏற்பட்ட தகராறு  காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணபதிகுறிச்சியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விஜய் நின்று கொண்டிருந்தபோது,  அங்கு வந்த செல்வமணி, அவரது உறவினர் ரெங்கநாதன் மகன் கவியரசன் மற்றும்  ரெங்கநாதன் ஆகிய மூவரும் சேர்ந்து விஜய்யை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல்  விடுத்துள்ளனர். மேலும் செல்வமணி கையில் வைத்திருந்த மதுபாட்டிலால்  விஜய்யை குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த விஜய் விருத்தாசலம் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து  விஜய் கொடுத்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார், செல்வமணி,  கவியரசன், ரங்கநாதன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து செல்வமணி,  கவியரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...