விருதுநகர், செப். 10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், மொட்டமலை பிள்ளையார்குளத்தை சேர்ந்த நரிக்குறவர் பெண்கள், தலைவர் லிங்கம் தலைமையில், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மொட்டமலை பிள்ளையார் குளத்தில் 100 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இலவச நிலத்தில் குடிசை போட்டு வசித்து வருகிறோம். அரசு வழங்கிய இடத்தில் பசுமை வீடு அல்லது மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட நிதியுதவி அளிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.