×

திருக்கல்யாணத்தில் பங்கேற்ற மூன்று பெண்களிடம் தாலிச்செயின் பறிப்பு கோயில் கதவை அடைத்து போலீசார் சோதனை

விருதுநகர், செப். 10: விருதுநகரில் சாமி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற 3 பெண்களின் தாலிச்செயின் பறிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் கோயில் கதவை அடைத்து சோதனை நடத்தி, விசாரணை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் சிவன் கோவிலில் நேற்று காலை 9.15 முதல் 10.15 மணி வரை மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இதனைக் காண நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண வைபவம் முடிந்த நிலையில், சாமி கும்பிட வந்த பெண்களின் கழுத்தில் இருந்த தாலிச்செயின்களை காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து கோயில் நிர்வாகிகள் பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ‘பிச்சை தெருவை சேர்ந்த காளீஸ்வரியின் 3 பவுன் தாலிச்செயின், மார்டன் நகரை சேர்ந்த நாகம்மாளின் 5 பவுன் தாலிச்செயின், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினத்தின் 2.5 பவுன் தாலிச்செயின் ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்துச் சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் கோயில் கதவை மூடி ஒவ்வொரு நபராக சோதனை நடத்தி வெளியே அனுப்பினர். ஆனால், திருடு போன செயின்கள் சிக்கவில்லை. இருப்பினும் கோயில் சிசிடிவி கோமிரா பதிவுகளை வைத்து நகை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...