×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரை பேரூராட்சியை செப்.18ல் முற்றுகையிட முடிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

மானாமதுரை, செப். 10: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தை செப்.18ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மானாமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம்  நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி உள்பட பலர் கலந்து கொண்டார். கூட்டத்தில் மானாமதுரை வைகை ஆற்றில் சாக்கடையை கலக்காமால் செய்ய ஒழுங்கு படுத்த வேண்டும். வைகை ஆற்றில் உள்ள கருவேல் மரங்களை அகற்ற வேண்டும்.
மதுரையிலிருந்து மானாமதுரை வரும் பேருந்துகள் பாலத்தின் கீழ்பகுதியில் செல்ல வேண்டும். பேருந்திலிருந்து பயணிகள் இறங்கி செல்கிற பகுதி இருளடைந்து உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக செல்கிற பேருந்துகள் அனைத்தும் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வரும் செப். 18ம் தேதி மானாமதுரை பேருராட்சி அலுவலகம் முன்பு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Block Manamadurai Barracks ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...