லால்குடி, செப்.10: லால்குடியில் இருந்து புறத்தாக்குடி செல்லும் தார்சலை சிதைந்து ஜல்லிகற்களாக ஆனதால் வானக ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து திருமங்கலம், நகர், நெய்க்குப்பை வழியாக புறத்தாக்குடி வரை செல்லும் சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், மினி பஸ்களும் மற்றும் விவசாய பணிகளுக்காக டிராக்டர்களும், மாட்டுவண்டிகளும் சென்று வருகின்றன. மேலும் நகர், நெய்குப்பை, மகிழம்பாடி, புறத்தாக்குடியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும், பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கல்லூரிகளுக்கும் லால்குடி-புறத்தாக்குடி தார்சாலையை பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வந்தனர்.