ஈரோடு, செப். 10: தென்முகம் வெள்ளோடு ஊராட்சியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்முகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டு கொம்பனை பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி எதுவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், வேறு வழியின்றி அருகில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.