நிலத்தடி நீர் குறைவதால் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல்

காரைக்கால், செப். 10: காரைக்காலில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் உள்ள இளையான்குடி கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய்களில் நீர்வரத்து குறைவு மற்றும் பழுது காரணமாக,   மாற்று இடத்தில் ஆழ்குழாய் அமைக்கும் பணியை மாவட்ட வேளாண் துறை தொடங்கியுள்ளது. இந்த பணியை, வேளாண்  அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறும்போது, காரைக்கால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, 100க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளை வெட்டி காவிரி நீர் மற்றும் பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் சிறப்புத் திட்டம் வகுத்து தூர்வாரி வருகிறது. மேலும், இப்பகுதியில் நிலத்தடியில் நீர் இருப்பின்மையால் மாற்று இடத்தில் குழாய் பதிப்பு செய்யப்படுகிறது. இதேபோன்ற குறைகள் உள்ள இடத்தில் ஆழ்குழாய் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நிலத்தடி நீர் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தேவைக்கு மட்டும் நிலத்தடி நீரை  விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.தொடர்ந்து, திருநள்ளாற்றை அடுத்த தென்னங்குடி சாலையோரத்தில் 360 குழி நில அளவில் நடைபெறும் குளம் வெட்டும் பணியை அமைச்சரும், கலெக்டரும் நேரில் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினர்.

Related Stories: