வேலூர், செப்.10:மாணவர்களின் அன்றாட வருகை, தேர்வில் பெறும் மதிப்பெண் விவரங்களை பெற்றோர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் புதிய ‘ஆப்’ முதன்முறையாக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களின் வருகை, அவர்கள் மாதாந்திர தேர்வு, பருவ தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் தொடர்பான முழு விவரமும் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக உடனுக்குடன் பெற்றோர்கள் அறிந்து கொள்கின்றனர்.இந்நிலையில், இதற்காக புதிய மொபைல் ‘ஆப்’ செயலியை வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உருவாக்கி அதை மாநிலத்திலேயே முதன்முறையாக அந்த கல்லூரி செயல்படுத்தியுள்ளது. இந்த ‘ஆப்’ நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இந்த புதிய ஆப் செயல்பாட்டை கல்லூரி முதல்வர் வி.குமார் தொடங்கி வைத்தார்.