வேலூர், செப்.10:வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெங்களூருவை சேர்ந்த வேன் டிரைவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கேனில் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரின் உடலில் தண்ணீர் ஊற்றினர். தகவலறிந்து விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கூறுகையில், ‘நான் பெங்களூரு ஜலஹள்ளி தாலுகாவை சேர்ந்த வேன் டிரைவர் மோகன். எனக்கு கடந்த 2010ம் ஆண்டு வேலூர் வேலப்பாடியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது. தற்போது, 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உறவினர்களை சந்திக்க, வேலூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பின்னர், என் மனைவி பெங்களூருவுக்கு திரும்பவில்லை. தற்போது எனது மனைவி, வேலூர் கஸ்பாவில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.