சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காய்ச்சல் நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதியுடன் கூடிய வார்டு துவங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறினார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய காரணிகள், அதை தடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு, மருத்துவ மாணவர்கள் துண்டு பிரசுரம் மற்றும் செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.இதை தொடர்ந்து மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறியதாவது: டெங்கு காய்ச்சல் மற்றும் பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.