அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், 23-வது தெருல் உள்ள திருவள்ளுவர் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரன் (80). இவரது மனைவி ஸ்ரீ தேவி. இவர்களது மகன் உதயகுமார் (40). மனநலம் பாதிக்கப்பட்ட உதயகுமார், கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், மதுரவாயலில் உள்ள ஒரு மருத்துவமனையில் உதயகுமாரை சேர்த்து சிகிச்சை அளிக்க பெற்றோர் முடிவு செய்தனர். மேலும், சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, நேற்று முன்தினம் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, மருத்துவமனை ஊழியர்கள் நேற்று முன்தினம் சந்திரன் வீட்டுக்கு வந்தனர். அவர்களை பார்த்த உதயகுமார், மருத்துவமனைக்கு செல்ல மருத்து அடம்பிடித்தார். கதறி அழுதார். அப்போது, சந்திரன் தனது மகனை சமாதானம் செய்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார்.