×

வாலிபர் தற்கொலை

கீழக்கரை, செப். 5:சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த புகாரி அகமது(38), கீழக்கரை பட்டாணி அப்பா தர்கா தெருவில் வசித்தார். இவரது மனைவி பாத்திமா(34). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மலேசியாவில் விசா இல்லாமல் தங்கியதால், புகாரி அகமது கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சில நாட்களுக்கு முன் புகாரி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில், அடிக்கடி அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர் காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. உள்ளே சென்று பார்த்துபோது புகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...