×

நம்புங்க இது ரோடு தான்... சாலைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தல்

காரியாபட்டி, செப். 5: இறக்கும் சாலைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின், விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காரியாபட்டியில்  நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை வட்டக்கிளை தலைவர் நம்பிருமாள், செயலாளர் கருப்பையா பொருளாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரேம்குமார் பேசினார். கூட்டத்தில், ‘சாலைப் பணியாளர்கள் கருவூலம் மூலம் ஊதியம் பெறவும், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் வழங்கல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சாலைப் பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவும், இறந்த சாலைப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து திரளாக பணியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் மாவட்ட பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...