×

ஹைமாஸ் விளக்கு அமைக்க கோரிக்கை ராஜபாளையத்தில் பராமரிப்பில்லா டிரான்ஸ்பார்ம்கள் குப்பை கொட்டும் இடமாகிறது

ராஜபாளையம், செப்.5: ராஜபாளையத்தில் டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பின்றி, குப்பை கொட்டும் இடமாக மாறி வருகின்றன. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையத்தில் பல்வேறு இடங்களில் உயர் மின்அழுத்த டிரான்ஸ்பார்ம்கள் உள்ளன. இந்த டிரான்ஸ்பார்ம்களை சுற்றி வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை வைக்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பிரதான சாலைகளில் உள்ள டிரான்ஸ்பார்ம்களில் அருகே, விளம்பர பலகைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். ஆனால், பல இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பின்றி குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. சில நேரங்களில் டிரான்ஸ்பார்ம்களில் ஏற்படும் மின்பொறியால், குப்பைகளில் தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மின்தடை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் நகரில் உள்ள டிரான்ஸ்பாரங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...