நெட்டப்பாக்கம், செப். 5: புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் வெங்கட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (45). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அய்யப்பன் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவர் வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் அரிகிருஷ்ணன் மகன் அருள்குமார் (25). இவரது வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அய்யப்பனின் மாட்டுக்கொட்டகை அருகே தேங்கி உள்ளது. இதுபற்றி அவர் பலமுறை எச்சரித்தும் அருள்குமார் கண்டுகொள்ள வில்லை. தொடர்ந்து கழிவுநீர் மாட்டுக்கொட்டகை அருகே வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.