×

ஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, ஆக. 22: ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் நேற்று காலை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆண்டிபட்டி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிப்பட்டி தாலுகா தலைவர் பிரவீந்திரன் தலைமை வகித்தார். அந்தோணி, வாய்க்கால் துறை ஆகியோர் முன்னிலை வைத்தனர். தாலுகா செயலாளர் கோபால் துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் செல்வம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். 60 வயதான முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோருக்கான நிதியுதவி வழங்குவதில் இடைத்தரகர்களை ஒழித்து லஞ்சம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு கோதுமை சீனி ஆகிய பொருட்களை எடை குறைவாக நிறுத்து, பொருட்களை மிச்சப்படுத்தி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று துணை வட்டாட்சியர் பாண்டியனிடம் மனுக்களை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு