×

தொடர் வழிப்பறி இரண்டு பேர் கைது

ராமநாதபுரம், ஆக.22:  ராமநாதபுரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பிரியாணி கடைக்காரரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய கும்பல் பணத்தை பறித்து சென்றது. இதையடுத்து வழிப்பறி கும்பலை பிடிக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி இச்சம்பவம் தொடர்பாக இளையாஜா(20), ரஞ்சித்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய யுவஸ்ரீதர்(20), முனியசாமி(21) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை