×

இடம் வாங்கி தருவதாக மோசடி ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது வழக்கு

ராமநாதபுரம், ஆக.22:  ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக். ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர் மீது ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சீனிவாசன், ராமநாதபுரம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், இடம் வாங்கி தருவதாக கார்த்திக் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.4 லட்சம் பெற்றுள்ளதாகவும், ஆனால் இடம் வாங்கி கொடுக்க வில்லை என்றும், பலமுறை கேட்டும் முறையாக தகவல் தரவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவின் பேரில், கார்த்திக் மீது ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை