உசிலம்பட்டி, ஆக.22: உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தினை சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. உசிலம்பட்டி மக்களின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தினை நேற்று சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு பார்வையிட்டது. தலைவர் துரைமுருகன் தலைமையில் குழுஉறுப்பினர்கள் பழனிவேல் தியாகராஜன், பரமசிவம், கீதா, தூசிமோகன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். மதுரை கலெக்டர் ராஜசேகர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.