பழநி, ஆக. 22: பழநி அருகே நடந்த பல்கலைக்கழக அளவிலான கபடி போட்டியில் ஏராளமான கல்லூரி அணிகள் பங்கேற்றன. பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் உள்ள பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நேற்று துவங்கியது. போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அணி, பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கலைக்கல்லூரி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி அணி, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி அணி, செயின்ட் ஆண்டனி கல்லூரி அணி, ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரி அணி, நிலக்கோட்டை அரசுக் கல்லூரி அணி பங்கேற்றன.