பழநி, ஆக. 22: பழநி நகராட்சி சார்பில் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் விற்பனை செய்வதற்காக நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுகின்றன. கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை சாலை வரை நீட்டிப்பு செய்து கொள்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.