×

வழுக்கி விழுந்த கடைக்காரர் பலி

திருப்பூர், ஆக 22:   திருப்பூர், பல்லடம், சின்னவடுகபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56). இவர் பல்லடம் பகுதியில் கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி திருப்பூர் தாராபுரம் ரோட்டிலுள்ள தனியார் பஸ் கம்பெனியில் உள்ள அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் எதிர்பாராத விதமாக வழுக்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...