×

பணம் கேட்டு தாக்கிய வழக்கில் 4 பேர் கைது

திருப்பூர், ஆக. 22:   திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வசித்து வருபவர் சிவானந்தம் (39). இவர் அதே பகுதியில் மின் சாதனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி நிதி வசூலுக்கு வந்த வி.எச்.பி அமைப்பை சேர்ந்தவர்கள்  சிவானந்தத்தின் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ரூ.ஆயிரம் நிதியாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் சிவானந்தம் ரூ.300 கொடுத்துள்ளார். அவர்கள் வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் சிறிது நேரம் கழித்து அவர்கள் சிவானந்தத்தின் கடைக்கு வந்த போது சிவானந்தத்தின் உறவினர் சிவா (28) இருந்துள்ளார். அவரிடமும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.   

 இதில் வாக்குவாதம் ஏற்பட்டு அமைப்பை சேர்ந்த சிலர் கடையில் பணியாற்றும் சிவானந்தத்தின் உறவினரான சிவா (28) மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்குட்பட்ட சிவா ஊத்துக்குளி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட பாலவிக்னேஷ் (27), கருப்பசாமி (24), தேவேந்திரன் (31), கார்த்திக் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...