×

அடிக்கடி குழாய் உடைவதை தடுக்க வேண்டும்

உடுமலை, ஆக. 22: திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை நகருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர, ராட்சத குழாய் மூலம் சின்னபொம்மன் சாலை, உடுக்கம்பாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், ஜே.என்.பாளையம், ராவணாபுரம், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. ஏற்கனவே 3முறை உடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 4வது முறையாக, வாளவாடி பஸ் நிறுத்தம் அருகே குழாய் உடைந்தது. இதனால் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. குழாயை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி உடைவதை தடுக்க புதியகுழாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா